இராவணன் மேலது நீறு எண்ணத் தருவது நீறு
பராவணம் ஆவது நீறு பாவம் அறுப்பது நீறு
தராவணம் ஆவது நீறு தத்துவம் ஆவது நீறு
அராவணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே
இராவணன் அதன் உடம்பில் அணிந்துகொள்வது திருநீறு.
<திருஞானசம்பந்தரின் பதிகங்களில் ஒரு வழக்கு
உண்டு. எட்டாவது பாடலில் ராவணனைக் குறிப்பிடுவார்.
ஒன்பதாவது பாடலில் திருமாலும் பிரம்மனும் சிவபெருமானுடைய
அடியையும் முடியையும் காணாத விஷயத்தைக் குறிப்பிடுவார்.
பத்தாவது பாட்டில் சமணர்களையும் பௌத்தர்களையும்
கண்டனம் செய்திருப்பார். ராவணன் மிகச்சிறந்த சிவபக்தன்.
வெல்லப்படமுடியாதவனாக இருந்தவன். அவனுடைய கர்வத்தை
ஒடுக்கி, அவனுக்கு வலுமிக்க வரங்களையும் தந்து அருளியவர்
சிவபெருமான். சிவபக்தனாகிய அவனுடைய உடலில் தரிக்கப்
பட்டிருப்பது திருநீறு.>
இதன் மேல்விளக்கமாகப் பழைய அகத்திய மடல்
ஒன்று:
விஸ்ரவாஸ் என்னும் ரிஷி ஒருவர் இருந்தார்.
அசுரர் குலத்தைச்சேர்ந்த அரசகுமாரி ஒருத்தி அவருடன்
கூடி வலிமை மிக்க மக்களைப் பெற்றாள். அவர்களில் மூத்தவனாகிய
தசகண்டனுக்குப் பத்துத்தலைகளும் இருபது கைகளும்.
அவன் பிரம்மாவை நோக்கி தவமிருந்து வலிமையும் பல
வரங்களையும் பெற்றான்.
அவனுடைய அரைச் சகோதரன் - Half-brother-ஐ அப்படித்
தானே சொல்லவேண்டும் - குபேரன். அவனும் விஸ்ரவாஸ¤க்குப்
பிறந்தவன்தான். ஆனால் தாய் யக்ஷ¢ணி.
விஸ்ரவாஸ் ரொம்பவும் தியாக உணர்வும் பரந்த மனப்பான்மையும்
உள்ளவர். இனவேறுபாடு பார்க்காமல் அசுரப்பெண், யக்ஷப்பெண் என்று
விதைத்துக்கொண்டே போயிருக்கிறார், பாருங்கள்.
குபேரன் சிவபெருமானை நோக்கித் தீவிர தவமிருந்து
லங்காபுரியையும் புஷ்பகவிமானத்தையும் பெற்று சுபிட்சமாக இருந்தான்.
தசகண்டன் அவனை விரட்டிவிட்டு புஷ்பக விமானத்தையும்
லங்காபுரியையும் கைப்பற்றிக்கொண்டு இலங்கேஸ்வரன் ஆனான்.
விரட்டப்பட்ட குபேரன் சிவபெருமானிடம் புலம்பினான். அவர்
அவனுக்கு அளகாபுரி என்னும் பட்டணத்தையும் நவநிதிகளையும்
கொடுத்து, தம்முடைய தோழனாக்கிக் கொண்டார்.
ஒருநாள் தசகண்டன் வடதிசையை நோக்கித் தன் புஷ்பக
விமானத்தில் சென்றான். எதிரில் கயிலை மலை இருந்தது. அதன்மீது
விமானம் பறக்காது. ஏனெனில் அதன்மீது சிவசக்தியர் தம்முடைய
கணங்களுடன் இருந்தனர். ஆகவே கயிலையை அப்படியே பெயர்த்து
எடுத்து அப்புறமாக வைத்துவிட்டு, விமானத்தைச் செலுத்த நினைத்தான்.
சுற்றிச் செல்வதில் அவனுக்கு விருப்பமில்லை.
மலையைப் பெயர்க்க முயன்றதுதான் தாமதம். சக்தி சிவனை
பயந்து கட்டிப்பிடித்துக்கொண்டது.
சிவன் கொஞ்சமும் அலட்டிக்காமல் லேசாக, மிக மிக லேசாகத்
தம்முடைய கால் பெருவிரலை ஊன்றினார்.
மலை அப்படியே தசகண்டன்மீது உட்கார்ந்து அவனைப்போட்டு
நசுக்கியது.
வலி தாங்காமல் பயங்கரமாக ஓலமிட்டு அலறினான்.
அதுவரைக்கும் அந்தமாதிரி யாருமே அலறியது கிடையாது.
பல ஆண்டுகள் அவ்வாறு நசுங்கிக் கிடந்து, மிகவும் வருந்திக்
கொண்டிருந்தான். அப்போது ஒரு சிவமுனிவர் சும்மா இருக்கமாட்டாமல்
அவனிடம்வந்து சாமகானப்பிரியனாகிய சிவனை இசையால் போற்றச்
சொன்னார். உடனே தன்னுடைய தலையைக் கொய்து ஒரு கையையும்
பிய்த்து யாழ் செய்து கைநரம்புகளை மீட்டி வாசித்தான்.
மனமகிழ்ந்த சிவபெருமான் அவனை விடுவித்ததுமட்டுமல்லாமல்
முக்கோடி வாழ்நாள் கொண்ட ஆயுளும் பராக்கிரமும் வஜ்ரசரீரமும்
பாசுபதம் முதலிய அஸ்திரங்களும் கொடுத்தார். யாராலும் வெல்லப்பட
முடியாத வாள் ஒன்றையும் கொடுத்தார்.
சக்தி சிவனை எதிர்பாராமல் தழுவி ஆலிங்கனம் செய்தததால்தான்
அதற்கு மூலகாரணனாக இருந்த ராவணனுக்கு இந்த மாதிரியெல்லாம்
கண்டதனமாக வரங்களையெல்லாம் சிவன் அள்ளிக்கொடுத்தார் என்று
அங்கிருந்த பூதங்கள் கிசுகிசுத்தன.
அத்துடனல்லாமல் ஒப்பும் இணையும் இல்லாத அளவுக்கு
அலறியதால் அவனுக்கு ராவணன் என்ற பெயரும் இட்டார்.
'ராவணம்' என்றால் 'அலறல்'.
இருந்தாலும் தம்மைக் கேட்காமல் தன்னிச்சையாக ராவணனுக்கு
யோசனை சொன்ன அந்த சிவமுனிவரை மனிதனாகப் பிறந்து சிவனாகிய
தம்மை மறந்து பிறசமயத்தில் உழன்று மீண்டும் தம்மை அடையுமாறு
செய்தார். அவரும் அவ்வாறே சிவனை மறந்து, பிற சமயத்தில் நுழைந்து,
பின்னர் சிவனருளால் சூலைநோயால் கஷ்டப்பட்டு,
"கூற்றாயினவாறு விலக்கிகிலீர்" என்று சிவனிடம் அடைக்கலம் புகுந்து,
"புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன், பூம்புகலூர் மேவிய புண்ணியனே"
என்றவாறு சிவனோடு சேர்ந்துகொண்டார்.
பராவணம் ஆவது நீறு பாவம் அறுப்பது நீறு
தராவணம் ஆவது நீறு தத்துவம் ஆவது நீறு
அராவணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே
இராவணன் அதன் உடம்பில் அணிந்துகொள்வது திருநீறு.
<திருஞானசம்பந்தரின் பதிகங்களில் ஒரு வழக்கு
உண்டு. எட்டாவது பாடலில் ராவணனைக் குறிப்பிடுவார்.
ஒன்பதாவது பாடலில் திருமாலும் பிரம்மனும் சிவபெருமானுடைய
அடியையும் முடியையும் காணாத விஷயத்தைக் குறிப்பிடுவார்.
பத்தாவது பாட்டில் சமணர்களையும் பௌத்தர்களையும்
கண்டனம் செய்திருப்பார். ராவணன் மிகச்சிறந்த சிவபக்தன்.
வெல்லப்படமுடியாதவனாக இருந்தவன். அவனுடைய கர்வத்தை
ஒடுக்கி, அவனுக்கு வலுமிக்க வரங்களையும் தந்து அருளியவர்
சிவபெருமான். சிவபக்தனாகிய அவனுடைய உடலில் தரிக்கப்
பட்டிருப்பது திருநீறு.>
இதன் மேல்விளக்கமாகப் பழைய அகத்திய மடல்
ஒன்று:
விஸ்ரவாஸ் என்னும் ரிஷி ஒருவர் இருந்தார்.
அசுரர் குலத்தைச்சேர்ந்த அரசகுமாரி ஒருத்தி அவருடன்
கூடி வலிமை மிக்க மக்களைப் பெற்றாள். அவர்களில் மூத்தவனாகிய
தசகண்டனுக்குப் பத்துத்தலைகளும் இருபது கைகளும்.
அவன் பிரம்மாவை நோக்கி தவமிருந்து வலிமையும் பல
வரங்களையும் பெற்றான்.
அவனுடைய அரைச் சகோதரன் - Half-brother-ஐ அப்படித்
தானே சொல்லவேண்டும் - குபேரன். அவனும் விஸ்ரவாஸ¤க்குப்
பிறந்தவன்தான். ஆனால் தாய் யக்ஷ¢ணி.
விஸ்ரவாஸ் ரொம்பவும் தியாக உணர்வும் பரந்த மனப்பான்மையும்
உள்ளவர். இனவேறுபாடு பார்க்காமல் அசுரப்பெண், யக்ஷப்பெண் என்று
விதைத்துக்கொண்டே போயிருக்கிறார், பாருங்கள்.
குபேரன் சிவபெருமானை நோக்கித் தீவிர தவமிருந்து
லங்காபுரியையும் புஷ்பகவிமானத்தையும் பெற்று சுபிட்சமாக இருந்தான்.
தசகண்டன் அவனை விரட்டிவிட்டு புஷ்பக விமானத்தையும்
லங்காபுரியையும் கைப்பற்றிக்கொண்டு இலங்கேஸ்வரன் ஆனான்.
விரட்டப்பட்ட குபேரன் சிவபெருமானிடம் புலம்பினான். அவர்
அவனுக்கு அளகாபுரி என்னும் பட்டணத்தையும் நவநிதிகளையும்
கொடுத்து, தம்முடைய தோழனாக்கிக் கொண்டார்.
ஒருநாள் தசகண்டன் வடதிசையை நோக்கித் தன் புஷ்பக
விமானத்தில் சென்றான். எதிரில் கயிலை மலை இருந்தது. அதன்மீது
விமானம் பறக்காது. ஏனெனில் அதன்மீது சிவசக்தியர் தம்முடைய
கணங்களுடன் இருந்தனர். ஆகவே கயிலையை அப்படியே பெயர்த்து
எடுத்து அப்புறமாக வைத்துவிட்டு, விமானத்தைச் செலுத்த நினைத்தான்.
சுற்றிச் செல்வதில் அவனுக்கு விருப்பமில்லை.
மலையைப் பெயர்க்க முயன்றதுதான் தாமதம். சக்தி சிவனை
பயந்து கட்டிப்பிடித்துக்கொண்டது.
சிவன் கொஞ்சமும் அலட்டிக்காமல் லேசாக, மிக மிக லேசாகத்
தம்முடைய கால் பெருவிரலை ஊன்றினார்.
மலை அப்படியே தசகண்டன்மீது உட்கார்ந்து அவனைப்போட்டு
நசுக்கியது.
வலி தாங்காமல் பயங்கரமாக ஓலமிட்டு அலறினான்.
அதுவரைக்கும் அந்தமாதிரி யாருமே அலறியது கிடையாது.
பல ஆண்டுகள் அவ்வாறு நசுங்கிக் கிடந்து, மிகவும் வருந்திக்
கொண்டிருந்தான். அப்போது ஒரு சிவமுனிவர் சும்மா இருக்கமாட்டாமல்
அவனிடம்வந்து சாமகானப்பிரியனாகிய சிவனை இசையால் போற்றச்
சொன்னார். உடனே தன்னுடைய தலையைக் கொய்து ஒரு கையையும்
பிய்த்து யாழ் செய்து கைநரம்புகளை மீட்டி வாசித்தான்.
மனமகிழ்ந்த சிவபெருமான் அவனை விடுவித்ததுமட்டுமல்லாமல்
முக்கோடி வாழ்நாள் கொண்ட ஆயுளும் பராக்கிரமும் வஜ்ரசரீரமும்
பாசுபதம் முதலிய அஸ்திரங்களும் கொடுத்தார். யாராலும் வெல்லப்பட
முடியாத வாள் ஒன்றையும் கொடுத்தார்.
சக்தி சிவனை எதிர்பாராமல் தழுவி ஆலிங்கனம் செய்தததால்தான்
அதற்கு மூலகாரணனாக இருந்த ராவணனுக்கு இந்த மாதிரியெல்லாம்
கண்டதனமாக வரங்களையெல்லாம் சிவன் அள்ளிக்கொடுத்தார் என்று
அங்கிருந்த பூதங்கள் கிசுகிசுத்தன.
அத்துடனல்லாமல் ஒப்பும் இணையும் இல்லாத அளவுக்கு
அலறியதால் அவனுக்கு ராவணன் என்ற பெயரும் இட்டார்.
'ராவணம்' என்றால் 'அலறல்'.
இருந்தாலும் தம்மைக் கேட்காமல் தன்னிச்சையாக ராவணனுக்கு
யோசனை சொன்ன அந்த சிவமுனிவரை மனிதனாகப் பிறந்து சிவனாகிய
தம்மை மறந்து பிறசமயத்தில் உழன்று மீண்டும் தம்மை அடையுமாறு
செய்தார். அவரும் அவ்வாறே சிவனை மறந்து, பிற சமயத்தில் நுழைந்து,
பின்னர் சிவனருளால் சூலைநோயால் கஷ்டப்பட்டு,
"கூற்றாயினவாறு விலக்கிகிலீர்" என்று சிவனிடம் அடைக்கலம் புகுந்து,
"புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன், பூம்புகலூர் மேவிய புண்ணியனே"
என்றவாறு சிவனோடு சேர்ந்துகொண்டார்.
No comments:
Post a Comment