Wednesday, October 23, 2013

தமிழ்/இந்திய வரலாறு

தமிழ்/இந்திய வரலற்றில் உள்ள சில முக்கிய நிகழ்ச்சிகளை நம்ம ஆட்கள் குறித்துவைக்கவில்லை. அப்படியே குறித்துவைத்திருந்தாலும் அவையெல்லாம் 
நமக்குக் கிடைக்கவில்லை.
ஆனால் சில சமயங்களில் மற்றவர்கள் குறித்துவைத்திருக்கிறார்கள். 
அவற்றில் சில நமக்குக் கிடைத்திருக்கின்றன.
சங்ககாலத்தின் சமுதாய அமைப்பு ஒருவகையானது. அதன்பின்னர் 
பல்லவர்/பாண்டியர் காலம் ஒருவகையானது. சோழர்களுடைய காலம் வேறொரு layer. அதையொட்டிய பாண்டியர் காலம் ஒருLayer. 
இதையொட்டிய துருக்கர் படையெடுப்பு,துருக்கர் ஆட்சி முதலியவை 
இன்னொன்று. அதன் பின்னரேற்பட்ட விஜயநகர அமரநாயக்க ஆளுனர்களின் 
காலம் ஒரு Layer. பின்னர் ஏற்பட்ட நாயக்கர்கள் ஆட்சி வேறொரு Layer. 
18-ஆம் நூற்றாண்டு ஒரு படிவம். பிரிட்டிஷ் ஆட்சியின் கும்பினிப் பகுதி ஒரு படிவம். பிரிட்டிஷ் நேரடி ஆட்சி இன்னொன்று. இருபதாம் நூற்றாண்டின் 
ஆரம்பம் ஒரு படிவம். சுதந்திரத்தின் பின்னால் உள்ள ஐம்பதாண்டு 
காலகட்டத்தில் PreDravidian Movements, Dravidian periods  Movements 
ஆட்சிகள் என்று பல படிவங்களைத் தோராயமாக நாம் தமிழக வரலாற்றில் 
காணமுடிகிறது.
இவை ஒவ்வொன்றின்போதும் அரசியல், சமுதாயம், பொருளாதாரம், 
போட்ட வரிகள், சமூகக்கூட்டமைப்பு, போரியல், ஆட்சிமுறைகள், கலைகள், பழக்கவழக்கங்கள்,. நம்பிக்கைகள், கலாச்சாரம், சமயம், மொழி, இலக்கியம் , Anthropology, மக்களின் மனோதர்மம், மனோவியல் முதலிய பல கூறுகளிலும் 
ஏராளமான வேறுபாடுகளைக் காணலாம்.

No comments:

Post a Comment